tamilnadu

img

கல்லூரிகள் திறப்பு எப்போது? அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம்...

சென்னை:
கல்லூரிகள் திறப்பு பற்றி 12 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.கொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப் பட்டுள்ள நிலையில், 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு சமீபத்தில் உத் தரவு பிறப்பித்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்த நிலையில் வருகிற 16ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்படும் என்றும், அதற் கான கருத்துக்கேட்பு கூட்டம் 9 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் திங்களன்று (நவ. 9) நடைபெற்றது.இந்நிலையில் நவம்பர் 16 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா என்பது பற்றி 12 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.