வாட்ஸ்அப் செயலி சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தற்போது செயல்பட துவங்கி உள்ளது.
சுமார் 3 மணி நேரமாக உலகமெங்கும் வாட்ஸ் அப் செயலி இயங்காததால் தகவல் பரிமாற முடியாமல் பயனர்கள் அவதிப்பட்டுள்ளனர். இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப் செயலி செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது மீண்டும் வாட்ஸ் அப் செயல்பட துவங்கி உள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் முடங்கியதும் நீங்கள் செய்தது என்ன? வாட்ஸ் அப் இல்லாத இந்த 2 மணி நேரம் எப்படி இருந்தது #ShareWithAV #WhatsappDown ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.