ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இரண்டாவது முற்யாக திருப்பி அனுப்பிய அளுநரின் செயலுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் ஆன்லைன் சூதாட்ட தடை ஆய்வுக்குழு தலைவர் நீதிபதி சந்துரு
கடந்த காலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் மட்டும் 40 க்கும் மேற்ப்பட்ட தற்கொலைகள் நடந்துள்ளன. பலர் தங்களது பணத்தை முற்றிழுமாக இழந்து கடனாளிகளாகியுள்ளனர் .இதனை தடுக்கும் விதமாக முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்து ,சூதாட்ட தடை அவசர மசோதாவை ஆளுநருக்கு அனுப்பியது முதல்முறை அதனை கண்டுகொள்ளாத அளுநர் தற்போது இரண்டாவது முறை அனுப்பியபோது 4 மாதங்கள் அதை கிடப்பில் போட்டுவிட்டு இப்போது அத திருப்பி அனுப்பியுள்ளர்.அளூநரின் இந்த செயளுக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆன்லைன் சூதாட்ட தடை ஆய்வுக்குழு தலைவர் நீதிபதி சந்துரு கூறுகையில்
ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் 4 மாத கால அவகாசம் எடுத்து, சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன்?
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை ஒன்றிய அரசுக்கு தான் அதிகாரம் உண்டு எனக் கூறுவது அரசமைப்புச்சட்டம் பற்றி அறியாதவர் கூறுவது என தனது கண்டனங்களையும் ,கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.