tamilnadu

குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் வரவேற்புகுழு அமைப்பு

குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்  மத்திய அமைப்பின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் வரவேற்புகுழு அமைப்பு

திருவண்ணாமலை, ஜூன் 15 - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் 12 ஆவது மாநில மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஞாயிறன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு  மாவட்ட தலைவர் இ. பிரகாசம் தலைமை தாங்கினார், சிஐடியு மாவட்டச் செயலாளர் பாரி, மாவட்ட தலைவர் காங்கேயன், பொருளாளர் முரளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  வருகிற செப்டம்பர் 20, 21 (சனி, ஞாயிறு) ஆகிய 2 நாட்கள் செய்யாறில் நடைபெற உள்ள இந்த மாநில மாநாட்டின் வரவேற்பு குழுவிற்கு,  கவுரவத் தலை வராக இ. மாரிமுத்து, தலைவராக வி. எம். வெங்கடேசன், செயலாளராக கே. செல்வம், பொருளாளராக எம். சலோமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள், சிஐடியு நிர்வாகிகள் பலர் இந்த அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.