தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் அனைத்துப் பொருட்களும் வழங்கப்படுகிறதா, அவற்றின் தரம், எடை போன்றவை குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் களஆய்வு நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மத்தியசென்னை மாவட்டம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் மாவட்டத் தலைவர் சாந்தி, செயலாளர் வி.தனலட்சுமி, நிர்வாகிகள் விமலா, நாகராணி, நாகரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.