சென்னை, ஆக. 23 - இணையதளம் மூலம் பட்டா, வரைபடம் பெற இனி செல்போன் எண் பதிவு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசு நிலம் தொடர் பான சேவைகளை பொதுமக் கள் எளிதாக பெற வேண்டும் என்ப தற்காக ஆன்லைன் வசதி களைச் செய்து தந்துள்ளது. https://eservices.in.gov.in/ eservicesnew/home.html ஆகிய இணையதளங்கள் மூலம் பட்டா, சிட்டா, அ-பதிவேடு, அரசு புறம் போக்கு நிலம் விவரம், வரைபட விவரங்கள், பட்டா நகல், பட்டா விண்ணப்ப நிலை, நகர நில அள வை, புலப்படம் அறிக்கை ஆகிய வற்றை எளிதாக பெறலாம்.
இந்த இணையதளத்தில் கிடைக்கும் இலவச சேவை கள் சிலர் தவறாக பயன்படுத்துவ தாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதாவது இலவசமாக பதிவிறக்கம் செய்யும் ஆவணங்களை சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதே போல் ஆவணங்களில் மோசடி களும் நடைபெறுகின்றன.
எனவே தமிழ்நாடு அரசு இந்த இணையதளத்தை வணிக நோக்கத்திற்காக மோசடிகளு க்கு தவறாக பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி இந்த இணைய தளத்தில் இருந்து பட்டா, புலப் படங்கள் என அனைத்து சேவை களையும் பெற செல்போன் எண் கட்டாயம் ஆகும். செல்போன் எண்ணை பதிவு செய்தால், அந்த எண்ணுக்கு ஓ.டி.பி குறுஞ்செய்தி வரும். அதைப் பதிவு செய் தால் தான் ஆவணங்களை பதி விறக்கம் செய்ய முடியும்.
அது மட்டுமின்றி ஒருவர் ஒரு செல்போன் எண் மூலம் அதிகபட்சமாக 8 ஆவணங் களைத் தான் பதிவிறக்கம் செய்யலாம். இந்த புதிய கட்டுப் பாடு சோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. அதனைத் தற்போது, முழுமையாக செயல் படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. “கடந்த காலங் களில் பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் இருந்து கட்டுப்பாடின்றி வில்லங்கச் சான்றிதழ் பெறும் நிலை இருந் தது. இதில் அதிகளவு மோசடிகள் நடந்ததால், தற்போது பதிவு செய்யும் நபர்கள்தான் சான்றி தழ் பதிவிறக்கம் செய்யும் நிலை உருவாக்கப்பட்டது.
அதன் மூலம் மோசடிகள் குறைந்து போனது. அதேபோல் தற்போது நில சான்றிதழ் வழ ங்கும் இந்த இணையதளத்தில் செல்போன் எண் கட்டாயம் என்று கொண்டுவரப்பட்டுள்ளது.
நில ஆவணங்களின் உண்மை நிலையை கண்டறிய இதில் ‘கியூஆர் கோடு’ வசதி உள்ளது. இருப்பினும் சிலர் ஆவ ணங்களில் திருத்தங்களை செய்து விடுகின்றனர். அந்த திருத் தங்கள் மூலம் மோசடிகள் அரங் கேறி விடுகின்றன. எனவே, அந்த சமயத்தில் பதிவிறக்கம் செய்தவர் களை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது செல் போன் எண் பதிவிடுவதால், சான்றிதழ் பதிவிறக்கம் செய்த வர்களை இனி எளிதாக கண்டறி ந்து விடலாம். எனவே மோசடி களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது என்று அரசு தெரி வித்துள்ளது.