சென்னை,மே 10-நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் வெள்ளியன்று (மே 10) செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரை, அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் எனவும் அவர் கூறினார். தேர்தல் ஆணையம் என்பது சுயேச்சையான அமைப்பு என்றும், அதற்குரிய அதிகாரத்தின்படி செயல்படுவதாகவும் அவர் பதிலளித்தார்.