tamilnadu

img

மேகதாதுவில் அணைகட்ட விடமாட்டோம்: துரைமுருகன்....

சென்னை:
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றிய பாமக சட்டமன்றக்குழு தலைவர் ஜி.கே. மணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், “மேகதாதுவில் அணைக் கட்டக் கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. முந்தைய அரசும் இதே நிலைப்பாட்டைதான் எடுத்திருந்தது. சட்டப் போராட்டமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரதமரிடமும் அழுத்தம் தரப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வீணாக அரசியல் நடத்தி வருகிறார்கள்” என்றார்.

;