tamilnadu

img

தமிழகத்தை பாதிக்கும் திட்டத்தை ஏற்கமாட்டோம்: முதல்வர் சொல்கிறார்

சென்னை,ஜூன் 27- தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத் தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மேற்கண்டவாறு கூறினார். பேரூரில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத் தையும் செயல்படுத்த அரசு தீவிர  நடவடிக்கை எடுத்துள்ளது  எனக் குறிப்பிட்ட அவர், வறட்சி பாதித்த பிற கடலோர மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.