சென்னை, ஜூன்.4-இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள அஸாஹி நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைத்தற்காக பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தும் வரை போராட்டம் ஓயாது என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எச்சரித்துள்ளார்.காஞ்சி மாவட்ட திருப்பெரும்புதூர் தாலுகாவை சேர்ந்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள அஸாஹி இந்தியா கிளாஸ்லிட், நிறுவனத்தில் தொழிலாளர்கள் கடந்த 72 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். அஸாஹி நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைத்த காரணத்திற்காக, 28தொழிலாளர்கள் வேலை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர். 6 தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 100 க்கும் அதிகமான தொழிலாளர்கள் காரணம்கோரும் அறிவிப்பு வழங்கப்பட்டு,விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய சட்டவிரோத தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடந்துவருகிறது. சுமார் 20 முறை சமரச பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நிர்வாகம் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை பரிசீலிக்க மறுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட வேண்டும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், சங்கம் வைக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சங்கத்தின் தலைவர் எஸ்.கண்ணன் தலைமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் போராட்டத்தை வாழ்த்தி பேசியதாவது:-பணிநீக்கம் செய்யப்பட்ட 28 தொழிலாளர்கள், பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட 6 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் வரைநீதிமன்றம், தொழிலாளர் துறை,நிர்வாகம் என எந்த முனையில் நெருக்கடி வந்தாலும் போராட்டத்தை கைவிடமாட்டோம்.தொழிலாளர்கள் தேவையில்லாமல் போராடினார்கள், நாசவேலை செய்தார்கள் என்று அபாண்ட பழி சுமத்தலை எப்படி ஏற்கமுடியும், எங்கள் உழைப்பில் கொழுத்த முதலாளிகள் கோடிகோடியாய் செலவு செய்து உலகநாடுகளுக்கு ஊர்சுற்றுவார்களாம், தொழிலாளி ஊதியம் கேட்டால் வழக்கு போடுவார்களாம் இது என்னநியாயம், நீதிமன்றம் தொழிலாளிக்கு எதிராக இருந்தால் அதை ஏற்கமுடியாது, நீதிமன்றம் கூட சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்படவேண்டும் என்பது சட்டம், ஆனால் அவர்கள் சட்டத்தைமீறினால், நாங்கள் மட்டும் கட்டுப்படவேண்டுமா? தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்காக காஞ்சிமாவட்டசிஐடியு செயலாளர் இ.முத்துக்குமார் கைதுசெய்யப்படுகிறார். நிர்வாகம் தொழிற்சாலையை நடத்தமுடியாவிட்டால் விலக்கிக்கொள்ளுங்கள், தொழிலாளர்களிடம் கச்சாபொருளை கொடுத்துப்பாருங்கள் தொழிற்சங்கம் சார்பாக நாங்களே பொருட்களை உற்பத்தி செய்து தொழிற்சாலையை நடத்திக்காட்டுகிறோம். தாம்சன், ஹனிபி ஆலைத்தொழிலாளர்கள் முதல் நாள் வேலை செய்து விட்டு மறுநாள் மீண்டும்பணிக்கு வரும்போது ஆலைக்கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஒரே இரவில்ஒருகார் நிறுவனம், பிரான்ஸ் நாட்டு கம்பெனிக்கு விற்கப்படுகிறது. இது அநியாயம், ஏன் ஆலையை மூடுனீர்கள், யாரைகேட்டு விற்றீர்கள் என நியாயம் கேட்ட முத்துக்குமாரை ஏன் கைதுசெய்தீர்கள் என்ற கேள்விக்கு இதுநாள் வரை பதில் இல்லை.கெம்பிளாஸ்ட் ஆலை தொழிலாளர்கள் 150 பேர் திடீரெனநடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.அஸா`ஹி இந்தியா கிளாஸ் நிறுவனத்தில் இரண்டரை மாதங்களாக நடக்கும் இந்த போராட்டத்தை வலுசேர்க்க ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் திரட்டி போராடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், துணைச் செயலாளர் கே.பகத்சிங்தாஸ், வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, தென்சென்னை மாவட்டச்செயலாளர் எம்.குமார் மற்றும் கலைச்செல்வி, புஷ்பலதா ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினர்.