tamilnadu

img

‘கல்வியில் அரசியல் செய்வது ஒன்றிய பாஜக அரசுதான்’ புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம்

சென்னை,செப்.10-  புதிய கல்விக் கொள்கையை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்றும் கல்வி யில் அரசியல் செய்வது ஒன்றிய பாஜக அரசுதான் என்றும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதிலடிகொடுத்துள்ளார்.

ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கா மல், வேண்டுமென்றே பழிவாங்கி வரு கிறது. ஜி.எஸ்.டி வரிப் பாக்கி தொடங்கி கல்வி திட்டங்கள் என பல திட்டங் களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் நிறுத்திவைத்துள்ளது மோடி அரசு.

தற்போது பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்டதால்தான் “சமக்ரா சிக்சா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய முதல் தவணையாக ரூ. 573 கோடியை விடுவிப்பேன் என ஒன்றிய அரசு அடம்பிடித்து வருகிறது.இந்த நிதியை வழங்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், தேசிய கல்வி கொள் கையை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என  ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். 

 எக்காரணத்தைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி பதிலடி கொடுத்துள் ளார். இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செவ்வாய்க் கிழமையன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கல்வியில் அர சியல் செய்யாதீர்கள் என்கிறார் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர். ஆனால், கல்வியில் அரசியல் செய்வது அவர் கள்தான். தாய் மொழியைத்தான் நாங்கள் ஆதரிக்கிறோம் என்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர். ஆனால் புதிய கல்விக் கொள்கையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்கள் அறிக்கையின் மூலம் அறியலாம்.

குறிப்பாக, அறிவியல் நூல்களை யும் தொழில் சார்ந்த நூல்களையும் பல் வேறு துறை சார்ந்த நூல்களையும் தமி ழில் மொழி பெயர்த்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின் றோம். இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களின் வழியாக நமது மொழி உரிமையை பாதுகாத்து வருகிறோம்.

அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் நாம் பின்பற்றி வரு கிறோம். இதுபோன்ற வரலாறுகள் நமக்கு இருக்கும் நிலையில் ஒன்றிய அமைச்சர் தாய்மொழி குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. நிதி யை நிறுத்துவதன் வழியாக 15 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெரு மக்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்துகின்றது ஒன்றிய அரசு.

புதிய கல்விக்கொள்கையை ஏற்று கொண்டால்தான் நிதி தர முடியும் என்று என்னிடம் நேரடியாக தெரிவித்தார் ஒன்றிய கல்வி அமைச்சர். எக்கார ணத்தைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் தமிழ்நாடு அரசு இல்லை. கொள்கையை விட்டுக் கொடுத்து நிதியை பெற வேண்டிய தேவையும் தமிழ்நாடு அரசுக்கு இல்லை.

இது போன்ற சிக்கல்களை ஒன்றிய அரசு ஏற்படுத்தினாலும் தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையிலான அரசு  இதை எல்லாம் முறியடித்து தொடர்ந்து கல்வியில் சாதனை புரியும். கல்வி யில் என்றும் நாங்கள் அரசியல் செய்ய  விரும்புவதில்லை” என்று  தெரிவித்துள் ளார்.