tamilnadu

img

சமூகப் பரவல் இல்லை என நம்மை நாமே ஏமாற்றக்கூடாது: கே.எஸ்.அழகிரி

சென்னை:
கொரோனா தொற்று தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை எனக் கூறுவது நம்மை நாமே ஏமாற்றும் செயல் என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:

“கொரோனா தாக்கத்தின் ஆரம்பக்கட்டமான ஜனவரி 30-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையிலான ஐந்து மாதங்களில் மொத்தமாக 6 லட்சம் பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 21 நாட்களில் மட்டுமே ஐந்து மாத பாதிப்பை மிஞ்சும் வகையில் 6 லட்சம் பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,732 ஆக உயர்ந்துள்ளது.யாரிடம் இருந்து யாருக்கு கொரோனா பரவியது? கொரோனா பரவியதற்கான காரணம்என்ன? தனக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்பது கூட பலருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் சமூகப் பரவல் இல்லை எனக் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறசெயலாகும்.கொரோனாவினால் அதிகம் பாதிக்கப் பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பலியானோர் எண்ணிக்கை 2700 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமூகப் பரவல் இல்லை என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. தற்போது சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும் மற்ற மாவட்டங்களில் எண்ணிக்கை கடுமையாக கூடி வருகிறது.

பேருந்துகளே பார்க்காத கிராமங்களில் கூட கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் இருக்கும் மருத்துவ வசதிகள் கிராமப்புறங்களில் இல்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை கொரோனா தொற்று என்றால் என்னவென்றே தெரியாத கிராமங்களில் இன்று அச்சம், பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால், விவசாயத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற் பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொது ஊரடங்கு காலத்தில் கிராமங்களுக்குச் சென்று நிம்மதியாக இருக்கலாம் என்று கருதியவர்கள் மூலமாக கொரோனா தொற்று பரவியிருக்கிறது.இதை அறிந்து தமிழக சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் கிராமப்புற மக்களிடம் கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்து, சமூகப் பரவலில் இருந்து கிராமப்புற மக்களைக் காப்பாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்”.இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

;