tamilnadu

img

மாநில வளர்ச்சிக்கே கடன் வாங்கினோம்: எடப்பாடி பழனிசாமி....

சென்னை:
மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே கடன் வாங்கியதாக திமுக வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.திமுக அரசு “வெள்ளை” அறிக்கை வெளியிடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“அதிமுக 2011-ல் ஆட்சி பொறுப்பேற் கும் போது கடன்சுமை இருந்தது. மாநிலங்கள் வளர்ச்சியடைய வேண்டுமெனில் கடன் பெற வேண்டிய அவசியம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் கடன் பெற்றுதான் வளர்ச்சி பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கடன் வாங்கப்பட்டது.மின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான, போக்குவரத்து கழகம் இயக்குவதற்கான தொகை அதிகரித்த போதும் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதனால் நட்டங்கள் ஏற்பட்டது.பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தான் எந்த திட்டத்திற்கு எவ்வளவு ஒதுக்குகிறார்கள் எனத் தெரியும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

;