சென்னை, ஆக. 24 - சென்னையில் ஆகஸ்ட் 31 அன்று பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் நடக்க இருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அந்த போட்டியை தற்போது நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில், “ பார்முலா-4 கார் பந்தயம் வருகிற சனிக்கிழமை (ஆக.31) காலையில் நடைபெறுகிறது. பந்த யத்தை 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. பந்தயத்தை பொதுமக்கள் இல வசமாக பார்க்கலாம். மதியத்திற்கு மேல் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்படும், இரவு 10.30 மணி வரை கார் பந்தய போட்டி கள் நடைபெறும். போக்குவரத்துக்கு எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில் கார் பந்தயம் நடத்தப்படும்” என்று தெரி வித்துள்ளார்.