tamilnadu

img

விருத்தாசலம் வட்டாட்சியர் கொரோனாவுக்கு பலி

சென்னை:
விருதாச்சலம் வட்டாட்சியர் கவியரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.கடலூர் மாவட்டத் தில் கொரோனா தொற்றுபரவல் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.பொது மக்கள் மட்டுமின்றி தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களும்பாதிக்கப்பட்டு வருகின்றனர். விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தவர் கவியரசுக்கு(வயது 48) கடந்த 9ந் தேதி கொரோனா தொற்று உறுதி ஆனது.இதனைத் தொடர்ந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரிக்கு அவர் அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் சிகிச்சை பலனின்றி கவியரசு சனிக்கிழமையன்று (ஜூலை 18) உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்த 
இறப்பு வருவாய்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

;