சென்னை, ஜூலை 16- தாம்பரம், மௌலானா நகர் மற்றும் கடப் பேரி ஜெயா தெருவில் ஏற்படும் மின் அழுத்த குறைபாட்டை சரி செய்யவும், புதிய மின் மாற்றி அமைத்துவும் வலியுறுத்தி புதனன்று (ஜூலை 15) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடப்பேரி துணை மின் நிலையம் எதிரில் கட்சியின் தாம்பரம் வடக்கு மற்றும் தெற்கு கிளைகள் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மின்சார வாரியத்தை தனி யார்மயமாக்குவதை கண்டித்தும். மின் கட்டண கொள்ளையை எதிர்த்தும் முழக்கங் கள் எழுப்பப்பட்டன. எஸ்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தென் சென்னை மாவட்ட பொருளாளர் பழனி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி வி. பங்குனியான், சிபிஎம் தாம்பரம் பகுதிச் செய லாளர் க.வெ.ராதாகிருஷ்ணன், வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் காண்டீபன் உள்ளிட் டோர் பேசினர்.