ஆணவப்படுகொலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்ச்சையான கருத்தைத் தெரிவித்ததாக நடிகர் ரஞ்சித் மீது விசிக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 09ஆம் தேதி நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் திரைப்படம் வெளியாகியது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஞ்சித் ஆணவ படுகொலை பெற்றோர்கள் அவர்கள் பிள்ளை மீது வைத்திருக்கக்கூடிய பாசத்தின் வெளிப்பாடு. இதை வன்முறையாகவோ, குற்றமாகவோ என்னால் பார்க்க முடியாது என்று சர்ச்சைக்குரிய வகையில் பல கருத்துக்களைப் பேசியிருப்பார். இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் பல கண்டனங்கள் எழுந்து வந்தது. ஏற்கனவே விசிக குறித்து சர்ச்சைக்குரிய வைகையில் வசனங்களுடன் டிரைலர் வெளியாகியிருந்து பின்பு தணிக்கை குழுவிடம் புகார் அளித்த பின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.