tamilnadu

img

இலங்கை கடற்படையின் அத்து மீறல்கள்!

சென்னை, ஜூலை 12- இலங்கை கடற்படை யின் தொடரும்  அத்துமீறல்களை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ தமிழ்நாடு மாநில செயலாளர் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளிலிருந்து, கடந்த 9-ஆம் தேதி மீன வர்கள் 176 விசைப் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி,  நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை தாக்கு தல் நடத்தியதுடன் மூன்று விசைப்படகுகள் உட்பட 13 மீனவர்களை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கடந்த 26 நாளில் தமிழக மீனவர்கள் 26 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 13 விசைப் படகுகள் வலைகள், பிடிக்கப்பட்ட மீன்கள், இதர உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை கடற்படை யினரின் தாக்குதல் தொடர்ந்து நடைபெறு வதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும்; இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் உள்ளிட்ட பொருட்களையும் மீட்டு கொண்டு வர அயலுறவுத் துறை அமைச்சகம் மூலம் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு இரா. முத்தரசன் குறிப்பிட்டுள் ளார்.