விழுப்புரம், ஜூலை 4- விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பறக்கும் படை யினர் சோதனையில் இது வரை ஒரு கோடிக்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்து உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், விழுப்பு ரம் மாவட்டம், விக்கிர வாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் இதுவரை நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே, 7 லட்சத்து, 39 ஆயிரத்து, 600 ரொக்க மும், 27.கிலோ வெள்ளி கொலுசுகளும்,84 சேவை களும்,18 வேட்டிகளும், 50 துண்டுகளும் கண்டுபிடிக் கப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டுள்ளது, மேலும் தேர்தல் நன்னடத்தை விதி மீறல் தொடர்பாக இது வரை 43 வழக்குகள் பதியப் பட்டுள்ளன, மேலும் மாவட்ட முழுவதும் கண் காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
நாளை மின்தடை
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 6 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தண்ட ராம்பட்டு, கொளமஞ்சனூர், டி.கே.பாளையம், ரோடு பாளையம், தானிப்பாடி, கொட்டை யூர், மலைய னூர் செக்கடி உள்ளிட்ட பல ஊர்களுக்கு மின்விநி யோகம் இருக்காது என மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.