tamilnadu

img

விதொச தலையீட்டால் அனைவருக்கும் 100 நாள் வேலை

உளுந்தூர்பேட்டை, ஜூலை 5- குடும்பத்தில் ஒருவர் தவிர பிறருக்கு வேலை தர  இயலாது என்று ஒன்றிய நிர்வாகம் மறுத்த நிலை யில் விவசாயத் தொழிலாளர்  சங்கத்தின் நிர்வாகிகள் வேலை நடைபெறும் ஏரிக்கே சென்று பயனாளி களை திரட்டிச் சென்று சாலை  மறியலில் ஈடுபடுவோம் என அறிவித்த பின் அனை வருக்கும் வேலை வழங்கப் பட்டது. உளுந்தூர்பேட்டை வட்டம் பாண்டூர் ஊராட்சிக் குட்பட்ட அரளி கிராமத்தில் வசிக்கும் 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள தலித் பகுதி மக்களுக்கு ஏரியில் குளம் வெட்டுவதற்கு இரு வாரகால (12 நாள்) திட்டம்  அமலாக்கப்பட்டது. அதன் படி இப்பகுதி மக்கள் சுமார் 90க்கும் மேற்பட்டோர் ஏரி யில் வேலை செய்வதற்காக  திரண்ட நிலையில், அங்கி ருந்த அதிகாரி குடும்பத்திற்கு ஒருவருக்குத்தான் வேலை வழங்க முடியும், வேலை அட்டை வைத்துள்ள அனை வருக்கும் வேலை கொடுக்க  முடியாது எனக் கூறி யுள்ளார். தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு சென்ற அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர்  டி.எம்.ஜெய்சங்கர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்  டி.எஸ்.மோகன் ஆகியோர் அனைவருக்கும் பணி வழங்காவிட்டால் பயனாளி களை திரட்டி சாலை மறிய லில் ஈடுபடுவோம் எனக் கூறினர். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் பிரதி நிதி அனைவருக்கும் வேலை  ஒதுக்கீடு செய்தார்.