முதுபெரும் தோழர் ஆ.நமச்சிவாயம் காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி வில்லியனூர் இடை கமிட்டிக்கு உட்பட்ட கரிக்கலாம்பாக்கம் கிளை உறுப்பி னர், புதுச்சேரியின் மூத்த தோழருமான ஆ.நமச்சிவாயம் (வயது75) திங்களன்று கால மானார். மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக வும் வர்க்க வெகுஜன இயக்கங்களில் முதல்நபராக பங்கேற்றவர் தோழர் நமச்சி வாயம். செம்மலர், மார்க்சிஸ்ட் இதழ்கள் விற்பனையிலும் தீக்கதிர் விநியோகத்திலும் தடம் பதித்தவர். அன்னாரின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பு என்று கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி யுள்ளார். அஞ்சலி கரிக்கலாம்பாக்கத்தில் வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு சிபிஎம் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ராஜாங்கம்,வெ.பெருமாள்,கொளஞ்சி யப்பன், தமிழ்ச்செல்வன், இடைக் குழுச் செயலாளர்கள் ராமமூர்த்தி,ஜோதிபாசு,மாநிலக்குழு, இடைக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது இறுதி நிகழ்ச்சி கரிக்கலாம்பாக்கம் மயாகத்தில்நடைபெற்றது.