tamilnadu

கொரோனா தொற்றுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி: அமைச்சர்....

சென்னை:
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவே கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மருத்துவர்களின் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல்கள் வெளிப் படைத் தன்மையுடன் நடைபெறும். இதில் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லாத வகையில் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மருத்துவ நியமனங்களில் எந்தமுறைகேடும் நடைபெறாது” என்றார்.தமிழகத்தில் கடந்த கொரோனா பரவலின் போது மதுபானக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பது போல மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.தமிழகத்தில் முழு ஊரடங்கால் பெரும்பலன் கிடைத்துள் ளது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத் தில் கொரோனா தொற்றுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப் படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

;