வறட்சியால் காய்ந்த தென்னைக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
வேலூர், ஜூன் 26- வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் தென்னை மரங்களை நடவு செய்துள்ளனர். சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் கிணறு, ஏரி, குளம் உள்பட நீர்நிலைகள் வறண்டு போயின. தற்போது நிலவும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டதால், ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் வருவதில்லை. இதனால் நாட்டறம்பள்ளி, கொடையாஞ்சி, சிகர்னப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், பல ஏக்கர் தென்னை மரங்கள் காய்ந்து போயின. எனவே காய்ந்துபோன தென்னை மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
வேலூர், ஜூன் 26- ராணிப்பேட்டை சுற்று வட்டாரத்தில் பொதுத் தேர்வில் பள்ளியளவில் சிறப்பிடம் பெற்ற அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது. ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி ஹெவி இன்டஸ்ட்ரிஸ் பிரிசிசன் லிமிடெட் தொழிற்சாலை சார்பில் 2 018-2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி யளவில் முதல் இரு இடங்களைப் பெற்ற 16 மாணவ, மாணவி களுக்கு சிறந்த மாணவர் என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது. மிட்சுபிஷி நிறுவன மனிதவளத் துறை துணைத் தலை வர் வி.எஸ்.ஜனார்த்தனன் வரவேற்றார். நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.ஸ்ரீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். நிறு வனத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான மசுசோ டெரடா பள்ளி மாணவர்களுக்கு விருதும், ரொக்கப் பரிசு, சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். விற்பனை இயக்குநர் கே.எம். திலீப்குமார் நன்றி கூறினார்.
மணல் குவாரி வேண்டாம்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
திருவெண்ணைநல்லூர், ஜூன் 25- விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம், அன்றாய நல்லூர் அருகே உள்ள தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைத்திட அரசு முயற்சிப்பதை கைவிடக்கோரி அப்பகுதி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திங்க ளன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அன்றாய நல்லூர், அண்ணாநகர், டி.புதுப்பாளையம், எடையார், சி. மெய்யூர் போன்ற பல கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் திங்களன்று காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்துக்குள் திரண்டு வந்தனர். ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நின்று மணல் குவாரி அமைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். உடனடி யாக அங்கிருந்த காவல்துறையினர் அவர்களில் சிலரை ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர். பொதுமக்கள் ஆட்சியரிடம் “ஏற்கனவே டி.புதுப்பாளை யத்தில் 2 இடங்களில் மணல் குவாரி அமைத்து மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டி மணல் எடுக்கப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே செல்வதால் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது அருகிலுள்ள அன்றாயநல்லூரில் மணல் குவாரி அமைத்திட அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருவதால் இது எங்க ளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ளது. எனவே விவசாய பூமியான இப்பகுதியை பாதுகாத்திடவும் தற்போது இப்பகுதி கிராமங்க ளில் குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கவும் மணல் குவாரி அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்” என அவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்ற ஆட்சியர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பினர்.