tamilnadu

வேலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை , ஆம்பூர் முக்கிய செய்திகள்சென்னை

ஸ்மார்ட் சிட்டி பணி விரைவுபடுத்தப்படும்

 வேலூர்  மாநகராட்சி  ஆணையர் தகவல்

வேலூர், நவ. 8- வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் “ஸ்மார்ட் சிட்டி” பணிகள் விரைவு படுத்தப்படும் என  வேலூர் புதிய மாநக ராட்சி ஆணையர் தெரி வித்துள்ளார். தமிழ்நாட்டில் உள் ளாட்சித் தேர்தல் விரை வில் நடைபெற இருக்கி றது. இதற்கான பணிகள்  நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை யொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரியும் அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் உள்ளவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரு கிறார்கள். வேலூர் மாநகராட்சி ஆணையராக  பணிபுரிந்த சிவசுப்பிர மணியன், திருச்சி மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் சென்னை ஆவடி  மாநகராட்சி ஆணையராக  பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி வேலூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப் பட்டு புதனன்று  பொறுப் பேற்றார். இவர் பூந்த மல்லி, திருவேற்காடு, குமார பாளையம், தாம்பரம், ராசி புரம் நகராட்சிகளில் ஆணை யராக பணிபுரிந்துள்ளார்.  செய்தியாளர்களிடம் புதிய ஆணையர் பேசிய போது, வேலூர் மாநகராட்சி யில் பொதுசுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்ப டும். வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் நடைபெற்று வரு கிறது. நடைபெறும் பணி கள்குறித்து ஆய்வு செய்து பணிகள் விரைவு படுத்தப்படும். அரசு அறி விக்கும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும். மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் உள் ளாட்சித் தேர்தலுக்கான பணி கள் வேலூர் மாநகராட்சியி லும் சிறப்பாக மேற்கொள் ளப்படும் என்று தெரி வித்தார்.

மானிய விலையில் வீரியரக காய்கனி விதைகள் விநியோகம்

கள்ளக்குறிச்சி, நவ. 8- கள்ளக்குறிச்சி தோட்டக்கலை துறை மூலம் 2019-20 ஆம் ஆண்டில் மானிய விலையில் வீரியரக காய்கனி விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. ஒருங்கினைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி தோட்டக்கலை துறைக்கு 159 ஹெக்டர்  காய்கனி சாகுபடிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த இலக்கை எட்டுவதற்கு தற்போது, மானிய விலையில்  வெண்டை, வெங்காயம், புடலை, பாகல், பீர்க்கன், கத்திரி  மற்றும் பல காய்கனி விதைகள் ரூ. 10,000 மானிய விலையில்  வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் காய்கனி விதைகள் வாங்கி சாகு படி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பில் உரம்,  பூச்சி மருந்து, இடுப்பொருட்கள் வழங்கப்படும். மேலும், சாகு படி செலவு மேற்கொள்ளப்படும் தொகையை விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ. 5 ஆயிரம் வரவு வைக்கப்படும். எனவே,  இந்த திட்டத்தினை அனைத்து விவசாயிகளும் பயன் படுத்திக்கொள்ளலாம். இத் திட்டத்தல் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள்  நிலை ஆவணங்கள், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கள்ளக்குறிச்சி தோடக்கலை உதவி இயக்குநர் அலுவலத்தை 04151225022 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு தங்கள்  பெயரை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இந்த தகவலை கள்ளக்குறிச்சி தோட்டக்கலை உதவி இயக்குநர் சி.வாமலை தெரிவித்திருக்கிறார்.

பெண் சிசுக் கொலை: பாட்டி கைது

திருவண்ணாமலை, நவ. 8- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ராயண்ட புரத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி குப்பு ( 55).  இவர்களுக்கு 2 மகன்கள். ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன்  நாகராஜ், கூலித் தொழிலாளியாக உள்ளார். அவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள்  உள்ளனர். இந்த நிலையில் ராணி மீண்டும் கர்ப்பமானார். அதைத்தொடர்ந்து பிரசவத்துக்காக ராணியை சேப்பாப்பட்டு கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 7 ஆவது நாளிலேயே இறந்தது. குழந்தையின் மரணம் குறித்து தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத  பரிசோதனை அறிக்கையில் குழந்தைக்கு விஷம் புகட்டிய தால் இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறை யினர் விசாரணை நடத்தினார். குழந்தையின் பாட்டி குப்பு, தனது மகனுக்கு 3 ஆவதும் பெண் குழந்தை பிறந்ததால், விரக்தியில் இருந்ததாகவும்,  இதனால் குழந்தையை கொலை  செய்ய முடிவு செய்து,  பாலாடையில் விஷம் கலந்து கொடுத்து  குழந்தையை கொலை செய்ததாகவும்  தெரியவந்தது. இதை யடுத்து  கொலை வழக்காக மாற்றம் செய்து குப்புவை காவல்  துறையினர் கைது செய்தனர்.

கோயிலில் டிக்கெட் மோசடி: ஊழியர்கள் மீது நடவடிக்கை

திருவண்ணாமலை, நவ. 8- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நுழைவு டிக்கெட் மோசடியில் ஈடுபட்ட இரண்டு ஊழியர்களை  இணை ஆணையர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்பவர்களிடம் சிறப்பு தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்கப்  படுகிறது. இந்த டிக்கெட் வழங்கும் ஊழியர்கள் சிலர், பொது மக்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் வழங்கா மல் கோயிலுக்குள் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆணையர் ஞான சேகரன்  விசாரணை நடத்தினார்.  இந்த விசாரணையில் அடிப்ப டையில் திருவண்ணாமலை கோயிலில்  டிக்கெட் வழங்காமல்  மோசடி செய்த, சிங்காரம், பிரேம்குமார் ஆகிய 2  ஊழியர்களை  இடைநீக்கம் செய்து  ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

தண்டவாளத்தை கடந்த பெண் ரயில் மோதி பலி

ஆம்பூர், நவ. 8- வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் பகுதியைச்  சேர்ந்தவர் தேவராஜ் . இவர் ஆம்பூர் அரசு போக்கு வரத்துக் கழக பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். மனைவி கீதாவுடன் சென்னை மருத்துவமனைக்கு செல்வ தற்காக ஆம்பூர் ரயில் நிலையம் வந்தார். அப்போது தண்ட வாளத்தை கடக்க முற்படும்போது மங்களூர் விரைவு ரயில் மோதி கீதா கணவன் கண்முன்னே உடல் சிதைந்து உயிரிழந்தார். இதுகுறித்து  ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலித் மக்களுக்கு அநீதி

இறந்தவர்களின் உடலை சொந்த இடத்தில் அடக்கம் செய்யும் கொடுமை

மதுரை, நவ. 8- கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை சீராய்வு செய்யக் கோரும் வழக்கில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், பள்ளிக்  கல்வித் துறை இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. குளித்தலையை சேர்ந்த மது சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு  மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,  “கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கடைப் பிடிக்கப்படும் வழிமுறைகளால் எந்தவிதத்திலும் கல்வியின் தரம் உயர வில்லை. எனவே கட்டாயக் கல்வி உரி மைச் சட்டத்தை சீராய்வு செய்ய வேண்டும்,  மேலும் வேறு பள்ளிக்கு மாறும் போது மாற்றுச் சான்றை கட்டாயமாக்க வேண்டுமெனக்  கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் வியாழனன்று விசார ணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்  தரப்பில், தற்போது கல்வியின் தரம்  மோசமாகி வருகிறது. அடுத்த இரண்  டாண்டுகளில் 4000 அரசுப் பள்ளிகளை  மூட இருப்பதாக செய்தி வெளியாகி  உள்ளது என தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞரோ,: பள்ளி களை இணைக்க மட்டுமே அரசுக்கு திட்டம்  உள்ளது எனக் கூறினார். இதையடுத்து நீதிபதிகள்: அரசுப்  பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை  குறைவது குறித்து அரசு ஆய்வு செய்ய  கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர்  மற்றும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர்  பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு  வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்ட சீராய்வு

பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு

இராமநாதபுரம், நவ.8- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி  தாலுகா தனிச்சியம் ஊராட்சிக்குட்பட்டது சேராங்குறிச்சி. இங்கு வசிக்கும் தலித்  மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக  மயான வசதியின்றி தவித்து வருகின்றனர்.  இறந்தவர்களின் உடல்களை அவர்க ளது சொந்த இடத்தில் அடக்கம் செய்துவரு கின்றனர். இந்தநிலையில் செவ்வாயன்று உடல் நலக்குறைவு காரணமாக அரசு  உப்பு நிறுவனத் தொழிலாளி கொடிவேல்  காலமானார். அவரது உடலை அடக்கம்  செய்வது தொடர்பாக கிராம நிர்வாக அலு வலர், காவல்துறையினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செய லாளரும் டி.என்எஸ்சி தொழிலாளர் சங்கத் தலைவருமான கே.பச்சமால், மாவட்டக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், டி.என்எஸ்சி தொழிலாளர் சங்க முன்னாள்  தலைவர் முருகவேல் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர், அப்போது கொடி வேல் உடலை அடக்கம் செய்ய தற்போது  இடம் ஒதுக்கி கொடுப்பதாகவும் நிரந்தரமாக சுடுகாடு அமைக்க மாவட்ட நிர்வாகம், வட்டாட்சியரிடம் மனு அளிக்கும்படியும் வருவாய்த்துறையினர் கேட்டுக்கொண்டனர். சேராங்குறிச்சி தலித் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சுடுகாடு அமைத்து தர உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என தலை வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.