tamilnadu

img

நடிகர் ரஜினிக்கு வீரமணி கண்டனம்

சென்னை:
திராவிடர் கழக நிகழ்ச்சி பற்றி உண் மைக்கு மாறாக பேசியதாக நடிகர் ரஜினிக்கு கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகை சார்பில் கடந்த 14 ஆம் தேதி நடத்தப் பட்ட நிகழ்ச்சியில் பெரியார் குறித்தும் ‘முரசொலி பத்திரிகையை கையில் வைத்திருந்தால் திமுக கட்சிக்காரர்கள் என்று கூறி விடலாம். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று கூறலாம்’ என்று பேசியிருந்தார். 

இதற்கு திமுகவினர் ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, “அரசியலுக்கு வருகிறேன் என்பவர் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ‘சோ’ வை புகழ்கிறேன் என்று துக்ளக்கில் எழுதாத ஒன்றையும், அச்சிடாத ஒன்று குறித்தும் பேசியுள்ளீர்கள். உண் மைக்கு மாறான கருத்தால் பெரியாரை பின்பற்றுபவர்களின் மனதைப் புண்படுத்திவிட்டீர். இவ்வாறு பேசத் தூண்டியது யார்? எங்கிருந்து உங்களுக்கு இப்படி பேசுமாறு உத்தரவு வந்தது. திராவிடர் கழக நிகழ்ச்சி பற்றி உண்மைக்கு மாறாக பேசியதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

;