வராஹா ரோந்துகப்பலை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு கடலோர காவல்படையிடம் அந்த கப்பலை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணைமுதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார்,கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் கிருஷ்ணசாமி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.