tamilnadu

ஒரேநாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி...

சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிராக  ஒரேநாளில் 3 லட்சத்துக்கும் மேற் பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது;-

சென்னையில் 18-44 வயதுக்குட்பட்ட வர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதன்படி, நாளொன்றுக்கு 20 ஆயிரம் தடுப்பூசிகள் என கடந்த ஒரு வாரத்தில் 1.55 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. கொரோனா தொற்று கோவை மாவட்டத்தில் அதிகரித்துள்ளதையடுத்து வியாழனன்று (மே 27) ஒருநாளில் 20 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.அவர்களில் 14,990 பேர் 18-44 வயதுக்குட் பட்டவர்கள் ஆவார். மேலும், 18-44 வகைக்கான தடுப்பூசி செலுத்த தொடங்கியதிலிருந்து இது மிக அதிக எண்ணிக்கையாகும்.மதுரையில், 18-44 வயதுக்குட்பட்ட 12,904 பேருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி போடப்பட்டது, 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் 2,872 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப் பட்டது.அதேபோன்று திருச்சி மாவட்டத்தில் 18-44 வயதுக்குள்பட்ட 3,746 பேருக்குத் தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப் பட்டது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

;