மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிக நகர் பகுதி செயலாளர் வி.செல்வராஜ்-எஸ்.ஜெயந்தி தம்பதியின் மகள் எஸ்.பிருந்தா- ஏ.அப்பாஸ் திருமண விழா மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் சென்னை அயனாவரத்தில் திங்களன்று (செப். 16) நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ராஜன், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த், கட்சியின் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.கார்த்தீஷ் குமார், ஆர்.ஜெயராமன், ஆர்.லோகநாதன், அ.விஜயகுமார், வி.ஜானகிராமன், எல்.பி.சரவணதமிழன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.கமலநாதன், அ.ஜான், பா.ஹேமாவதி, வி.குப்புசாமி, வீ.ஆனந்தன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.