tamilnadu

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தும் திட்டம்

சென்னை,டிச.23 சமையல் எண்ணெயை பல முறை மீண்டும் பயன்படுத்துவது மிகவும் கடுமை யான உடல்நலக் கேடு என்பதை நாம் அனை வரும் நன்கு அறிவோம். இது உயர் ரத்த அழுத்தம், பெருந்தமனி தடிப்பு, அல்சைமர் நோய், கல்லீரல் நோய்கள் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். துரதிர்ஷ்டவசமாக, நாடு முழுவதும் இது ஒரு பரவலான நடைமுறை யாகும், சில பெரிய ஹோட்டல்களிலிருந்தும் உணவகங்களிலிருந்தும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரிக்கும் முக வர்கள் அதை சிறிய ஹோட்டல்களுக்கும், மீண்டும் அங்கிருந்து சாலையோர கடை களுக்கு செல்கிறது. இதிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற வும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ)  இந்தியா முழுவதும் உள்ள பயோ டீசல் உற்பத்தியாளர்களுடன் இணைந்து, ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை சேகரிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்களாக நிய மிக்கப்பட்டுள்ள ஆனந்த்ஆயில் கார்ப்ப ரேஷன் (ஏஓசி), உணவு பாதுகாப்பு அதிகாரி களின் (எஃப்எஸ்ஓ) ஆதரவுடன் உணவ கங்கள், ஹோட்டல்கள் போன்ற உணவு வணிக ஆபரேட்டர்களிடமிருந்து (எஃப்.பி.ஓ) பயன்படுத்திய சமையல் எண்ணெயை சேகரிக்கிறார்கள்.  சேகரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட சமை யல் எண்ணெய் மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள கிடங்கில் சேமித்து பயோ டீசல் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.இந்த முயற்சியின் பயனைப் பெற விரும்பும் எந்த ஹோட்டல் உரிமையாளர்கள்   மதுரை மற்றும் அதனைச் சுற்றி உள்ளவர்கள்  94455 17187 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். அல்லது வாட்ஸ்அப்-பில்அனுப்பலாம்.