பொன்னேரி துணை மின் நிலையத்தை 110கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்தி, தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று (ஜூன் 21), பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்கு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.எம். அனீப் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் இ.தவமணி, டி.மதன் உட்பட பலர் பேசினர்.