tamilnadu

img

கொரோனாவை ஒழிப்பதில் முழுத் திறமையை வெளிப்படுத்துக... ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு...

சென்னை:
கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், திங்களன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்கலாம். பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை வினியோகம். இதை தவிர்த்து பிற கடைகள்  இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் நோய் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றியது வருமாறு:-

இந்தப் பெருந்தொற்று நோய்க் காலத்தில்  மருத்துவத் துறை, உள் ளாட்சித் துறை மற்றும் அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து நோய்த் தொற்று கட்டுப்பாடு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் சிறப்பாக செயலாற்றி வரும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

நிவாரணத்தொகை...
அரசு அறிவித்திருக்கும் கொரோனா நிவாரணத் தொகை முழுமையாக அனைத்து மக்களுக்கும் சென்று சேர்ந்துவிட்டதா? என்பதை ஆட்சியர்கள்  உறுதி செய்ய வேண்டும்.மாநிலத்தில் முழு பொது ஊரடங்கு நடைமுறைக்கு வருகின்றது. இந்தச் சூழ்நிலையில் மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழவகைகள், பால் மற்றும் குடிநீர் போன்ற தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.'

தரமான உணவு...
மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு தேவையான தரமான உணவுப் பொருட்கள், பால், குடிநீர் இருப் பதை நீங்கள் உறுதி செய்திட வேண்டும்.

காய்கறிகள்...
வீதிகளில் வாகனம்/தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்கப் படுவதற்கான ஏற்பாடுகளை வேளாண் துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் கண்காணிக்க வேண்டும்.

வீடுவீடாக பரிசோதனை...
வீட்டுக்கு வீடு சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிவது நோய்த்தொற்றைக் கண்டறியும் முகாம்கள் நடத்துவது, பரிசோதனைகளை அதிகரிப்பது போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.நோயாளர்கள், நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை ஆகியவற்றை அடைவதில் போக்குவரத்து சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்ள வேண்டும்.
மக்களிடையே நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை நீங்கள் அயராது தொடர வேண்டுமென்றும்.

கண்காணிப்பு
ஊரடங்கு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். அதே சமயம் அனுமதிக்கப்பட்ட பணிகள் உதாரணமாக விவசாய இடுபொருட்கள், வேளாண் விளை பொருட்கள் ஆகியவற்றின் போக்குவரத்து எவ்வித தடையும் இல்லாமல் இயங்குவதையும் உறுதி செய்ய வேண்டும்.

ஆலோசனைக் கூட்டங்கள்...
உங்கள் மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி அவர்களின் கருத்துகளைப் பெற்றும் கட்டுப் பாடு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படலாம்.

குறிக்கோள்...
அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பினைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.அவை முறையாக பயன்படுத்தப் படுகிறதா என்பதை கண்காணிப்பதுடன் நோய்த்தொற்று சதவிகிதத்தை குறைப்பது ஒன்றையே குறிக்கோளாக் கொண்டு செயல்பட வேண்டும்.மேலும் இக்காலக்கட்டத்தில், அரசுடன் இணைந்து செயலாற்ற பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் விருப் பம் தெரிவித்து வருகின்றன.மாவட்ட அளவில் அவர்கள் பணியை ஒருங்கிணைத்து மக்களுக்கு அவர்களின் சேவையை கொண்டு சேர்க்க நீங்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். அதற்கென மாவட்ட அளவில் ஒரு தனி அலுவலரையும் நியமிக்கலாம்.மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என் பதை கவனத்தில் கொண்டு நீங்கள் செயலாற்ற வேண்டும்.நோய்த்தொற்று தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங் கள் பொதுமக்களுடன் இணைந்து மேற்கொள்ளும் போது அதில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

இது சமூகத்தின் மிகமிக முக்கியச் செயல்பாடு ஆகும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு - அது மேலும் பரவாமல் தடுப்பதற்கு அதன் சங்கிலியை உடைக்க வேண்டும்.ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் அந்த சங்கிலியை உடைக் காமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்காகக் தான்  இந்த முழு ஊரடங்கு போடப்படுகிறது.பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தான் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத் தப்படுகிறது என்ற நோக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

விலைமதிக்க முடியாத உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்!
ஒரு பக்கம் மருத்துவப் பிரச்சனைகள் - இன்னொரு பக்கம் நிதி நெருக்கடிகள் - இத்தகைய இரண்டு மாபெரும் இன்னல்களை ஒரே நேரத்தில் தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. எனவே,எவ்வளவு விரைவாக கொரோனா என்ற நோய்த் தொற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.மாவட்ட ஆட்சியர்களாகிய நீங்கள் உங்களது இத்தனையாண்டு கால அனுபவம், அறிவு, சக்தி, திறமை அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி கொரோனா தடுப்புப் பணிகளை ஆற்ற வேண்டும்.“எனது காலத்தில் எடுத்த முயற்சிகளால் கொரோனா முற்றிலுமாக ஒழிக் கப்பட்டது. கொரோனாவே இல்லை என்ற சூழலை உருவாக்கினேன்” என்று தலைநிமிர்ந்து நீங்கள் சொல்லக் கூடிய அளவுக்கு பணியாற்ற வேண்டும்.உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.உங்களால் மட்டுமே முடியும் என்ற மிகுந்த நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.இந்த ஆலோசனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை தலைவர் திரிபாதி, தலைமை செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

;