tamilnadu

img

அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பங்கேற்கத் தடைகோரிய மனு தள்ளுபடி

இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனை கூட்டங்களுக்குத் தலைமை தாங்கக் கூடாது என முதலமைச்சருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு நாத்திகர் என்பதால், இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்குத் தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மேலும், இந்து மதத்தைப் பின்பற்றுவதாக இந்து கடவுள் முன் உறுதிமொழி எடுத்த பிறகே இக்கூட்டங்களுக்குத் தலைமை வகிக்க முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 
இந்தியா மதச்சார்பற்ற நாடு எனவும், இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்குக் கருத்துச் சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும்,
முக்கிய பதவிகளை வகிப்பவர்கள், பதவியேற்கும்போது கடவுள் பெயரிலோ, அரசியல் சட்டத்தின் பெயரிலோ பதவியேற்க அரசியல் சட்டம் அனுமதி வழங்கியுள்
ளது எனவும் குறிப்பிட்டனர்.

எந்த மதமும் குறுகிய மனப்பான்மையை போதிக்கவில்லை. பிற மதத்தினரைப் புண்படுத்தக் கூறவில்லை எனக் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் மத உணர்வு 
ஏற்கத்தத்தல்ல எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன் அனுமதி பெறாமல் பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிட்ட
னர்.

 

;