tamilnadu

img

சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் நியமனத்தை எதிர்த்து வழக்கு

சென்னை, ஆக. 29 - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் நிய மனத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. சுனில்குமாரை நிய மித்தது, பணியில் உள்ள அதிகாரி கள் உரிமையை பறிக்கும் செயல். 

பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் நலனை கருத்தில் கொள்ளாமல் உள்நோக்கத்தோடு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணமாக சுனில் குமார் செயல்பட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.