tamilnadu

தொற்றுநோய் பரப்பும் சட்டத்தின்கீழ் பாஜக-வினர் மீது வழக்குப்பதிவு

சென்னை, ஜூலை 18- கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்யக்கோரி எழும்பூர் நீதிமன்ற வாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கறுப்பர் கூட்டம்  யூடியூப் சேனலை தடை  செய்யக்கோரி எழும்பூர் நீதிமன்ற வாசலில்  பாஜக-வினர் வெள்ளியன்று (ஜூலை 18)  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்  144 தடை உத்தரவை மீறியதாக பாஜகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள் ளது. அந்த கட்சியின் மாநில பொதுச் செயலா ளர் கரு.நாகராஜன் உள்பட 250 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய தீய எண்ணத்தி லான செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் எழும்பூர்  காவல்நிலையத்தில் வழக்கு பதியப் பட்டுள்ளது.