tamilnadu

img

உடுமலை சங்கர் கொலை வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை:
உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை மற்றும் 5 பேரின் தண்டனைக் குறைப்பை எதிர்த்து அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கர் மற்றும் கவுசல்யா தம்பதியினர் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தப் பட்டது. இந்த தாக்குதலில் கணவர் சங்கர் உயிரிழந்தார்.மாநிலத்தையே உலுக்கிய இந்தக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை வழக்கில் இருந்து விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. மேலும் மணிகண்டன், செல்வகுமார், தமிழ்வாணன், ஜெகதீசன் மற்றும் மதன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

;