tamilnadu

img

முதுபெரும் தோழர் குடியாத்தம் கண்ணனுக்கு புதுச்சேரியில் புகழஞ்சலி

புதுச்சேரி, ஜூலை 10- முதுபெரும் தோழர் குடியாத்தம் கண்ணன் மறைவையொட்டி இரங்கல் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால வளர்ச்சிக்கு உறு துணையாக இருந்த முதுபெரும் தோழர் குடி யாத்தம் எம்.கண்ணன் (89) உடல் நலம் குன்றி காலமானார். இவருக்கு வேலூர் குடியாத்தம் சொந்த  ஊராக இருந்தாலும் புதுச்சேரி சவானா ஆலை என்று சொல்லக்கூடிய சுதேசி பஞ் சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்தார். அப்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டதால் நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் பாரதி பஞ்சாலையில் பணிக்கு சேர்ந்து தொழிற்சங்க வளர்ச்சிக்கும், கட்சி யின் வளர்ச்சிக்கும் பாடுபட்டார். வயது மூப்பின் காரணமாக பெங்களூரில் உள்ள தனது மகள் இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி காலமானார்.

இரங்கல் கூட்டம்

புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் அவருக்கு பிரதேச தலைவர் கே.முருகன் தலைமையில் இரங் கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், மாநி லக்குழு உறுப்பினர் பெருமாள், சிஐடியு பிர தேச செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் குணசேகரன், பிரபுராஜ், கலியமூர்த்தி, ராம லிங்கம், ரவிச்சந்திரன், முன்னாள் பஞ்சாலை  சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட் டோர் மறைந்த குடியாத்தம் கண்ணன் உருவப்  படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.