tamilnadu

img

விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் காந்தி சிலைக்கு மரியாதை...

கிராமங்களே இந்தியாவின் ஆன்மா என்ற மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத்தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னை தாம்பரத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.   கிராமப்புற விவசாய மக்களைப் பாதுகாப்போம், ஆட்சியாளர்களின் வேளாண்விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம் என்றும் தேசிய ஊரக வேலைத்திட்டத்தை பாதுகாக்க வேண்டும்.  நிலமற்றவர்களுக்கு நிலம்  வழங்க வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்ச்சிக்கு வி.தொ.ச. தாம்பரம் பகுதி பொறுப்பாளர் எஸ்.முருகன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், சிபிஎம் மூத்த தோழர் எஸ்.தாஸ் உள்ளிட்டோர்.