tamilnadu

img

கருவூல கணக்குத்துறையை விப்ரோ கார்பரேட்

கருவூல கணக்குத்துறையை விப்ரோ கார்பரேட் நிறுவனத்திற்கு தாரைவார்க்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு அரசு  ஊழியர்சங்கம் சார்பில் வெள்ளியன்று (ஜூன் 7) சார்நிலை கருவூல அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதனையொட்டி எழும்பூரில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை வளாகத்தில் அன்சர்பாஷா தலைமையி லும், சென்னை மாநகராட்சி வளாகத்தில் சிவக்குமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை  மாவட்டத் தலைவர் எம்.அந்தோணிசாமி,  சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சுந்தராம்பாள், சீனிவாசலு (சென்னை மாநகராட்சி), விவேகானந்தன் (தங்கசாலை), காமராஜ்அம்பேத்கர், ஜீவன் உள்ளிட்டோர் பேசினர்.