தமிழில், பயணக்கட்டுரை நூல் என்றாலே ஏ.கே.செட்டியார் என்ற எழுத்தாளர்தான் முன்னோடி என்று சொல்லலாம்.அவர் போகாத நாடுகளே இல்லை என்று சொல்லுமளவுக்கு உலகம் சுற்றியவர்.இன்னும் சொல்லப்போ னால் பயண இலக்கியம் என்றொரு வகைமையே அவர் தொடங்கி வைத்ததுதான்.
அவரது வழியொற்றி பின்னா ளில் ஏராளமான எழுத்தாளர்கள் தங்கள் பயணக்கட்டுரை நூல் களை எழுதினர். குறிப்பாக நம் காலத்தில் இதயம் பேசுகிறது வார இதழின் ஆசிரியர் மணியன் அவர்கள், இங்கிலாந்து, அமெ ரிக்கா,ஜப்பான்,தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு அந் நாடுகளின் அழகை வர்ணித்து வர்ணித்து எழுதியதை வாசிக்க ஏராளமான வாசகர்களும் இருந்த னர்.
ஆனால்,தோழர் காமு அவர்க ளின் ஆஸ்திரேலியா போஸ்ட் என்ற பயணக்கட்டுரை நூல்,முன்னோடி எழுத்தாளர்களின் கட்டுரைகளி லிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா குறித்து இவ்வளவு நெருக்கமாக யாரும் அறிமுகப் படுத்தியதில்லை. ஆஸ்திரேலியாவின் அழகைப் பற்றி மட்டும் பேசாமல்,அந்நாட்டின் நில அமைப்பு, வாழ்விடம், மக்கள் தொகை, பழங்குடிகள்,மத நம்பிக்கை, மதங்களின் சமூகத் தாக்கம், தனிமனித சுதந்திரம், விளையாட்டு, பள்ளிகள் செயல் படும் விதம், ஆசிரியர்களின் அணுகுமுறை, பொதுப் போக்கு வரத்து செயல்படும் விதம், அர சுக்கும் மக்களுக்குமான உறவு.. என்று கட்டுரைகள் பேசுகின்றன.
ஒவ்வொரு கட்டுரையை யும் ஒரு அழகான சிறுகதைபோல, கவித்துவமான உரைநடையில் அவர் எழுதிச் சென்றிருப்பது வாசகரை ஆஸ்திரேலியா நாட்டிற் குள் உலவ விட்டிருக்கிறது. பணம் செலவில்லாமல் ஆஸ்திரேலியா சுற்றிய அனுபவம் கிடைக்கிறது.
பள்ளி, விளையாட்டு மைதா னம், நூலகம், குடிநீர் ஆதாரம், நீர் மேலாண்மை, போக்குவரத்து என அரசின் எல்லைக்குட்பட்ட அனைத்துப் பொதுச் சொத்துக்க ளின் மீதும் அந்நாட்டு அரசும், மக்களும் காட்டும் அக்கறையும், மக்களிடம் கருத்துக் கேட்டு பின்னர் செயல்படுத்தும் அணுகுமுறையும் நம்மை ஆச்சரியத்திற்கு உள் ளாக்குகிறது.அதேபோல திருட்டு என்பதைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை எனும் மக்களின் கூற்றும், நம்நாட்டின் அனுபவத்தை அதற்குப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் யாரும் அனுபவிக்கும் அல்லது வெட்கப்படும் ஒரு உணர்வைத்தான் அது தரும் என்பது உண்மை.
ஏறத்தாழ 44 சதவீதமாக இருக்கும் கிறித்துவர்களுக்கு ஈடாக 39 சதவிதமாக இருக்கும் மத நம்பிக்கையற்றவர்கள் அதாவது நாத்திகர்களும் அந்த நாட்டில் வசிக்கின்றனர். வசிக்கின்றனர் என்றால், மெஜாரிட்டி மதத்தை சேர்ந்தவர்களால் எவ்வித அச்சமு மின்றி, அவர்களுக்கான நலன் என்று தனித்துப் பாராத அரசாக இருக்கிறது என்பது மட்டுமல்ல; மக்களும் எவ்வித உணர்வு வேற்று மையுமின்றி இருப்பதும், மதம் என்பதும், மதமில்லை என்பதும் ஒரே குடும்பத்தில் இருந்தாலும் அது அக்குடும்பத்தில் உறுப்பி னராக உள்ளவர்களின் தனிப்பட்ட விசயம்; அதில் உள்ள நடைமுறை களை பின்பற்றுவதும் அவரவர் விருப்பம் சார்ந்தது.யாரும் யாருக்கும் தடையில்லை. இவர்க ளால் அரசுக்கோ, அரசால் இவர்க ளுக்கோ எவ்வித இடையூறும் இல்லை.
நீ இந்நாட்டின் குடிமகன் என்ற ஒரே அக்கறைதான் அரசுக்கும் மக்களுக்கும் இருக்கிறது.
அந்த நாட்டில் நிலவும் இந்த வொரு நாகரீகத்தை நம் இந்திய அனுபவத்தோடு பொருத்திப் பார்க்கையில் நாம் இன்னும் எவ்வ ளவோ முன்னேற்றம் அடைய வேண்டியதிருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ என்ற ஏக்கம் வருகிறது.
ஆஸ்திரேலியா போஸ்ட்
கோவை காமு
பக்கம்-192
விலை-ரூ.250
தொடர்புக்கு-94434 20386