சென்னை,ஜூன் 24- சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் பேரவை தேர்தலில் இந்திய கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறை யாக திருநங்கை வெற்றி பெற்றுள்ளார். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் நளினா பிரஷீதா. இவர் திருநங்கை. சென்னையிலுள்ள லயோலா கல் லூரியில் எம்எஸ்சி விஷூவல் கம்யூ னிகேஷன் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த கல்லூரி யில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான மாணவர் தேர்தல் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நளினா 320 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கல்லூரியின் துணைச் செயலாளராக பொறுப் பேற்றுள்ளார். இந்திய கல்லூரி வரலாற்றி லேயே திருநங்கை கல்லூரி யூனி யனில் வெற்றி பெற்றது இதுவே முதன்முறையாகும். இந்த வெற்றி குறித்து நளினா கூறியதாவது:- லயோலா எனக்கு தாயைப் போல. நான் இன்று எப்படி இருக்கிறேனோ அதற்கு கல்லூரி தான் மிக முக்கிய காரணம். எனது நண்பர்கள், பேராசியர்கள் எனக்கு நல்ல ஆதரவு அளித்தார் கள். பெண்களுக்கான விளை யாட்டு மற்றும் நடன குழுக்களை அமைக்க திட்டம் வைத்துள் ளேன். மேலும் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி வகுப்பு களையும் அறிமுகப்படுத்த திட்டம் உள்ளது. ஆண், பெண் போன்று திரு நங்கை என்பதும் பாலினம்தான். எவ்வித வித்தியாசமும் இல்லை. உங்களைப்போல நாங்களும் இந்நாட்டில் வசிப்பவர்கள்தான். ஆனால், திருநங்கைகள் வளர்ச்சிக்கென போதுமான வசதிகள் செய்யப்படவில்லை. முதன்முறையாக இந்த கல்லூரியில் சேர்ந்தபோது மிக வும் கூச்சப்பட்டேன். ஆனால், எனக்கு தானாகவே நல்ல நண் பர்கள் அமைந்தார்கள். முதலில் சிலர் என்னை கேலி செய்தனர். பின்னர் காலப்போக்கில் நண்பர் களாக்கிக் கொண்டேன் என்றார்.
கனிமொழி வாழ்த்து
மக்களவை திமுக உறுப்பி னர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றி களை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்’ என வாழ்த்துக் கூறி பதிவிட்டுள்ளார்.