சென்னை, ஜூன் 4-தமிழகம் முழுவதும் புதிய பாடத்திட்டத்தில் பாடம் நடத்துவது குறித்து ஒரு லட்சத்திற்கும் மேற் பட்ட ஆசிரியர்களுக்கு ஜூன் 11ஆம் தேதி முதல் பயிற்சி துவங்கப்படவுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் 1 , 6 , 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப் பட்ட நிலையில், எஞ்சியுள்ள 8 வகுப்புகளுக்கும் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.புதிய பாடப் புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களைக் கொண்டு, ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.முதற்கட்ட பயிற்சி ஈரோடு, அரியலூர், நாமக்கல், சென்னை உள்ளிட்ட ஐந்து மண்டலங்களில் 11ஆம் தேதி நடக்கிறது. அடுத்த கட்டமாக மண்டல பயிற்சி வகுப் பில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட அளவில் இருக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப் பார்கள் என்று ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.