தொடர் விடுமுறையால் குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலாப்பயணிகள், அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் கொட்டுகிறது.