tamilnadu

img

நாளை பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டம் தொடக்கம்!

சென்னை,பிப்.17- தமிழ்நாடு பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டம் நாளை தலைமைச் செயலகத்தில் தொடங்கவுள்ளது.
மார்ச் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தொடர்பாக நாளை முதல் 3 நாட்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறைகள், அது சார்ந்த அமைப்புகளுடன் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. 19ஆம் தேதி வணிக வரித்துறை, 20ஆம் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில்துறை சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது..UGC வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஒன்றிய அரசைக் கண்டித்து மதுரை தமுக்கம் மைதானம், தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.