tamilnadu

img

தமிழகம்: 500 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை!

தமிழ்நாட்டில் நாளை முதல் 500 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
தக்காளி விளைச்சல் குறைவாக இருப்பதாலும், அதன் வரத்து குறைந்திருப்பதாலும் நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி விலை ரூ.60 ஆக இருந்தது, தற்போது கிலோ ரூ.200 வரை விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நாளை முதல் 500 நியாயவிலைக் கடைகளில்  தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 10 கடைகளிலும், சில மாவட்டங்களில் 15 கடைகளிலும் பரப்பளப்புக்கு ஏற்றவாறு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.