tamilnadu

பழங்குடியினர் குறித்த ஆய்வை ஊக்கப்படுத்த “தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்”

சென்னை,நவ.5- பழங்குடியினர் தொடர்பான  ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள் ளும் மாணவர்களை ஊக்கப்படு த்தும் வகையில் தமிழ்நாடு அரசு “தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்” என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற மாணவரின்  குடும்ப ஆண்டு  வருமான வரம்பு ரூ.8  லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும்  ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப் படும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவருக்கு மாதம் ரூ.10 ஆயிரமும் (6 மாதத்திற்கு) மற்றும் முனைவர் பட்டம், முனைவர் பட்ட  மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரமும் (3 வருடத்திற்கு) உதவித்தொகையாக வழங்கப் படும். இத்திட்டத்திற்கான நெறிமுறை களை “https://www.tn.gov.in/forms/deptname/1” என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தினை 2024-2025 ஆம் ஆண்டில் செயல் படுத்த இத்திட்டத்திற்கான விண்ணப் பம் 05.11.2024 லிருந்து இணைய வழியிலும் (Online) மற்றும் இயன்முறையிலும் (Offline) வரவேற்கப்படுகின்றன. இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் “https://forms.gle/BDdkHTL6Ltkt5ToQ7” என்ற இணைப்பில் நேரடியாக 30.11.2024-க்குள் விண்ணப்பிக்கு மாறும் மற்றும் இயன்முறையில் (Offline) விண்ணப்பிக்க விரும்பும் மாணாக்கர் “https://www.tn.gov.in/forms/deptname/1” என்ற  இணைப்பிலிருந்து விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தி னை இயக்குநர், பழங்குடியினர் நலன், சேப்பாக்கம், சென்னை- 600005 என்ற முகவரிக்கு  30.11.2024 க்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

மேற்கண்ட விவரங்களை மாணவர்களுக்கு தெரிவித்து அவர்களை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, அறிவுறுத்துமாறு தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.