tamilnadu

img

இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு

சென்னை:
தமிழகம் முழுவதும இம்மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 4வது ஞாயிற்றுக்கிழமையாக இன்று காலை தளர்வில்லா ஊரடங்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதனால் மாநிலம் முழுவதும் அனைத்து கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப் பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும், மருத்துவ சிகிச் சைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களுக்கும், அமரர் ஊர்திகளுக்கும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.அதேபோல், பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தத் தடையும் இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் செய்தி சேகரிக்க செல்லவும் தடை இல்லை என்று கூறப் பட்டுள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் வாகனங் களை தடை செய்யக்கூடாது என்று காவல்துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.