tamilnadu

img

இன்று வேளாண் சட்ட நகல்களை எரிக்கும் போராட்டம்....

சென்னை:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்ட நகல்களை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் இன்று  திட்டமிட்டபடி (ஜனவரி 13) நடைபெறும் என்று  விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அறைகூவலுக்கு இணங்க வேளாண் சட்ட நகல்களை எரிக்கும் போராட்டம் நாடு முழுவதும் ஜனவரி 13 போகிப் பண்டிகை நாளில் நடைபெறுகிறது. திட்டமிட்டபடி தமிழகத்திலும் இப்போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

;