கடலூர், அக்.13- கடலூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய குழந்தைகள் புத்தக திருவிழா திங்கள்கிழமை (அக்.14) தொடங்கி, 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நம்ம கடலூர், கடலூர் சிறகுகள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் ஆகியவற்றுடன் பல்வேறு அமைப்புகள் இணைந்து 3-ஆவது ஆண்டாக தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. கடலூர் நகர அரங்கில் வருகிற 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடை பெறும் இந்த விழா தொடர்பாக ஒருங்கிணை ப்பாளர்கள் சாகித்ய அகாதமி விருதாளார் ஆயிஷா இரா.நடராஜன், மருத்துவர் ந.இளந்திரையன், ஜெ.ஜனார்த்தனன், கவிஞர் பால்கி, ஜான்சன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த புத்தகத் திருவிழா குழந்தைகளுக்கான புத்த கங்களுடன் நடைபெறுவதே சிறப்பாகும். நிகழாண்டில் ஒரு லட்சம் குழந்தைகள், ஒரு லட்சம் புத்தகம் என்பதை இலக்காகக் கொண்டு ள்ளோம்.
கண்காட்சியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி களுக்கு தனிச்சலுகையாக 100 மாணவர்களை அழைத்து வரும் பள்ளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்படு கின்றன. ரங்கோலி, ஓவியம், ஆய்வு சமர்ப்பித்தல், போஸ்டர் போட்டி, பவர் பாயிண்ட், அறிவியல் கண்காட்சி, குழு நடனம், தீயற்ற சமையல் உள்பட அன்றாடம் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதலி டம் பெறும் 25 மாணவர்கள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு செய்யும். தினமும் காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை நடைபெறும் கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம். தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிக ளும் நடைபெறும். மாண வர்கள் தாங்கள் படித்த புத்த கங்கள் குறித்த விமர்சனமும் செய்கின்றனர். எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், ஓரிகாமி கலைஞர் வி.வி.எஸ்.சாஸ்திரி, தமிழ்நாடு அறிவி யல் இயக்கத் தலைவர் தினகரன், இஸ்ரோ விஞ்ஞானி ராஜசேகர், விஞ்ஞானிகள் தீபன்சக்கர வர்த்தி, இந்துமதி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். விருது வழங்கி எழுத்தா ளர் மாலன் நிறைவுரை யாற்றுகிறார். இந்தக் கண்காட்சியில் அனைத்து பள்ளி மாணவர்க ளும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.