tamilnadu

img

மக்களுக்காக போராடிய ஒன்றிய கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிகாரி நடவடிக்கை எடுக்க வி.தொ.ச. வலியுறுத்தல்....

சென்னை:
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஒன்றியம், தளுகை ஒன்றிய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான முத்துக்குமார் மீது கொலை மிரட்டல் விடுத்த ஒன்றியப்பணி மேற்பார்வையாளர் ( ஒவர்சியர்)மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது,. 

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர்,   முன்னாள் எம்எல்ஏ, மாநில பொதுச்செயலாளர்  வீ.அமிர்தலிங்கம் ஆகியோர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளரும், தளுகை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான இரா.முத்துக்குமார் , மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தியும், முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட 100 நாள் வேலையை உடனே வழங்கவேண்டும், வேலைக்கான கூலியை குறைக்கக் கூடாது, குடிநீர், சாலை வசதி,சுகாதாரம் உள்ளிட்ட மக்களின்  கோரிக்கைகளை பல முறை உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.  எனவே, இதைக் கண்டித்தும்கோரிக்கைகளை உடன் நிறைவேற்றக்கோரியும்  நவம்பர் 6 ஆம்  தேதி போராட்டம்நடத்துவதற்கு நோட்டீஸ் அச்சடித்து  விநியோகம் செய்துள்ளார். 

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓவர்சியராக பணி புரியும் ராஜேஷ் என்பவர் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமாரின்  செல்போனுக்கு போன் செய்து,போராட்டம் நடத்தினா நீ என்ன பெரிய ஆளா,  உன்னால என்ன செய்ய முடியும். நான் பெரிய ரவுடி தெரியுமா? உன்னை விடமாட்டேன் என்று வாய் கூசும் வார்த்தைகளாலும், தொழில்முறை ரவுடிகளை போல கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.தொடர்ச்சியாக ஊராட்சியில் மக்களுடைய அடிப்படையான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தின் மூலம் பெற்றுத் தருவதால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ஓவர்சியர் மக்கள் நல சேவகரை கொலை மிரட்டல் விடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆகவே ஓவர்சியர் மீது தமிழக அரசும் காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.