tamilnadu

img

காவல்துறை தடியடிக்கு கி.வீரமணி, கனிமொழி கண்டனம்

சென்னை,பிப்.16- குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வண்ணாரப் பேட்டையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது அதிமுக அரசின் காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக மக்களவை உறுப்பினர் கனி மொழி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், அறவழியில் போராடுவது ஜன நாயகத்தில் அனுமதிக்கப்பட்ட அரசமைப்புச் சட்டமுறையே ஆகும். அற வழிப் போராட்டத் தைத் தடுக்க முடியாதுஉச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றங்களே போராடும் மக்களுக்கு உரிமை உண்டு - ஜனநாயக அமைப்பில் என்று கூறும் நிலை யில், தமிழ்நாட்டில் அத்தனை ஆயிரக்கணக்கான மக்கள்மீது வழக்குப் பதிவு செய்யும் விசித்திரம் ஒருபுறம்; மறுபுறம் தாங்கள் அங்கே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளித்து விட்டு, இங்கே இஸ்லாமிய சிறுபான்மையினர் நலத்தைப் பாதுகாப்போம் என்ற இரட்டை வேடம் ஏனோ? சென்னை - வண்ணையில் நடைபெற்ற இஸ்லாமியர் போராட்டத்தில் சென்னைக் காவல்துறையினர் - சில அதிகாரி கள் தடியடிப் பிரயோகம் செய்தது விரும்பத்தகாதது; கண்டிக் கத்தக்கது! பெரும் கூட்டம் கூடும் போது ஊர்வலம் செல்வோர்மீது வழக்குப் பதிவு செய்வதைத் தாண்டி இப்படி வன்முறையை ஏவியுள்ளதற்கு யார் மூல காரணம்? தாக்கீது எங்கிருந்து? அண்மைக்காலத்தில் தமிழகக் காவல்துறை பா.ஜ.க. ஆட்சி தமிழகத்தில் நடை பெறுவது போலவே கற்பனை செய்து கொண்டு குடி மக்களின் நலன் கருதி ஜனநாயக உரிமைக் குரல் எழுப்புவோரைக் கண்டு பாயும் நிலை - மற்ற கட்சிகளின் கருத்துரிமை, பேச்சுரிமை யைக்கூட பறிக்கும் ஒரு சார்பு நிலை வெளிப்படையாகவே உள்ளது. சென்னை வண்ணை யில் நடத்திய வன்முறைகளுக்கு காவல்துறை - ஆளும் அரசின் சார்பில் மனிதநேயத்தோடு வருத்தம் தெரிவிக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனிமொழி
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வண்ணாரப் பேட்டை போராட்டத்தை போலீ சார் உரிய முறையில் கையாள வில்லை. சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார்  நிலைமையை தவறாக கையாண்டதால் வன்முறை ஏற்பட்டது. சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தை உரிய முறையில் கையாண்டு இருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்க லாம். வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி யுள்ளார்.